Siru Kathaigal | இனிப்பு – அலுவலகம்‌

Categories சிறுகதைகள்Posted on
Siru kathaigal-inippu-aluvalakam‌
Share with :  

9. இனிப்பு…

 

 

 

 

அலுவலகம்‌ செல்லும்‌ வழியில்‌ பேருந்து நிலையத்தில்‌ தங்கையையும்‌,
குழந்தைகளையும்‌ பார்த்தேன்‌. நலம்‌ விசாரித்தேன்‌.

“தரிந்தவங்க கல்யாணத்துக்கு வந்தோம்‌. அப்படியே உங்களையும்‌
பார்த்திட்டு போகலாமென்று வந்தோம்‌…” என்று சொன்னாள்‌.

“சரியம்மா… வீட்டுக்கு போங்க… நான்‌ சாயங்காலம்‌ வாரேன்‌…” என்று
திரும்பிய எனக்கு… சுரீர்‌… என்று மனது பிடித்தது.

மனைவி அடிக்கடி என்‌ தங்கையைப்‌ பற்றி குறை சொல்வாள்‌. அது
நினைவுக்கு வந்தது.

“பிறந்த வீட்டுக்கு சும்மா எவறுங்கையோடுதான்‌ உங்க தங்கச்சி வருவா…
ஒரு தின்பண்டம்‌ உண்டா…. பிள்ளைகள்‌ இருக்கேன்னு ஒரு நினைப்பு
வேண்டாம்‌…”

கடைக்குப்‌ போய்‌ ஸ்வீட்‌ டப்பாக்களை வாங்கி தங்கையிடம்‌ கொடுத்து.
“வீட்டுக்குப்‌ போங்க…” என்று அனுப்பி வைத்தேன்‌.

இரவில்‌ என்‌ மனைவி, “உங்க தங்கச்சிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ங்க… நிறைய தின்பண்டங்கள்‌ வாங்கிட்டு வந்திருக்காங்க… உங்களுக்கு
ஒரு லட்டூ கொாண்டூ வரட்டூமா….?” என்றாள்‌ லட்டூ திங்காமலேயே
எனக்கு இனித்தது.